Thursday, August 25, 2011

வடக்கில் 140,000 பேருக்கு நிரந்தர வதிவிடம் இல்லை

வடக்கில் சுமார் 140,000 பேர் நிரந்தர வதிவிடம் இன்றி வாழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேசூழல் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பரவி வருவதுடன் அங்கிருக்கும் மக்கள் கூடாரங்களில் வசித்துவருவதாக குறித்த சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் இலங்கை வடக்கு மக்களின் நிலை குறிந்து மறந்துவிட்டதாகவும் குறித்த மக்களுக்கு வீடு வழங்கும் செயற்திட்டத்தினை தனியே அரசினால் முன்னெடுக்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச அமைப்புகள் கைகொடுக்கும் பொழுது அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

free counters