Tuesday, August 23, 2011

லிபியாவில் இலங்கையர் எவரும் இல்லை


யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ள லிபியாவில் இலங்கைப் பணியாளர்கள் எவரும் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

லிபியாவில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோதே அங்கிருந்த இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பியதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

லிபிய யுத்தத்தால் இதுவரையில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிபிய தலைநகர் திரிபோலியை அரச எதிர்ப்பு படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இராணுவத்தினருக்கும் அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்துள்ளது

No comments:

Post a Comment

free counters