Tuesday, August 23, 2011

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கடாபியின் மகன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் தோன்றினார்

லிபிய கர்னல் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் போராட்டக்காரர்களால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது.
இந்த நிலையில் அவர் தலைநகர் திரிபோலியில் தனது ஆதரவாளர்கள் முன்பாக மீண்டும் தோன்றினார். அப்போது போராட்டக்காரர்களின் முதுகு எலும்புகளை அரசு உடைத்துவிட்டது என்றும் கொக்கரித்தார்.
செய்பை கைது செய்து காவலில் வைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்த மறுநாள் செய்ப் தனது ஆதரவாளர்களுடன் அரசு வாகனத்தில் ஹொட்டலுக்கு வந்தார்.
நேற்று போராட்டக்காரர்கள் லிபியா ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர். இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) செய்ப் அல் இஸ்லாம் தனது ஆதரவாளர்களுடன் அதிகாலையில் ஹொட்டல் சிக்சோஸ் வந்தார்.
தந்தை கர்னல் கடாபிக்கு பின்னர் ஆட்சிக்கு வரக்கூடியவர் என்று 39 வயது செய்ப் கருதப்பட்டு வந்தார். மனித இனத்திற்கு எதிராக குற்ற நிகழ்வுகள் மேற்கொள்வதாக தமக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை பற்றியும் கவலைப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தலைநகர் திரிபோலி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

free counters