Sunday, August 28, 2011

இலங்கையில் முதல் தடவையாக பெண் சட்டமா அதிபர் நியமனம்

இலங்கையி;ல் முதல் தடவையாக பெண் ஒருவர் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சாந்தி ஏவா வனசுந்தரவே புதிய சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார். 
ஏற்கனவே முதன்முறையாக பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் முதல் அவர் இலங்கையின் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இதனையடுத்து சொலிஸிட்டர் ஜெனரலாக பாலித பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கிடையில் பதவியில் இருந்து இளைப்பாறும் மொஹான் பீரிஸ் அமைச்சரவையின் சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

No comments:

Post a Comment

free counters