Sunday, September 4, 2011

இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி .


இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச் சந்திக்க வில்லை. அஜித் திரைவாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி, திணா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா படம். கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.
இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம் பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும், மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில் இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.
இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டி கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார். அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர்.
உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்

No comments:

Post a Comment

free counters