இலங்கையில் நடைபெற்றதாக கூறும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் பிரயோகித்த அழுத்தங்களின் போது இலங்கை சீனாவினை நோக்கி நகர்ந்தமையால் இந்தியா அதனை அதிக கவனத்தில் கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகாரத்துறைச் சேர்ந்த அதிகாரியொருவர் இந்த தகவலை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்தின் பின் இலங்கையில் ஈரான் மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததை அடுத்து இந்தியா தனது விசேட கவகத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment