அமெரிக்காவை தீண்டிய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இனி தலைதூக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
அதிபர் ஒபாமா வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வானொலியில் நாட்டு மக்களுக்காக நிகழ்த்தும் உரையில் இதைத் தெரிவித்தார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு: கடந்த 10 ஆண்டுகள் நமக்கு நெருக்குதலான காலக்கட்டம். இரட்டைக் கோபுரத்தை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கிய சம்பவம் சோகமானது.இருப்பினும் அதைக் கண்டு நாம் அயர்ந்திடவில்லை. மாறாக நமக்குள் துணிவுதான் அதிகரித்தது. நம்மை தீண்டியவர்களை பழிவாங்கி அவர்களுக்கு தக்கப் பாடம் புகட்டுவோம் என்று சவாலிட்டு அதை சாதித்தும் காட்டினோம்.
கடந்த 10 ஆண்டுகளில் அல்கொய்தாவின் முக்கிய தலைவர்களில் பலரை தீர்த்துக் கட்டிவிட்டோம். ஏன்? இரட்டைக் கோரபுத் தாக்குதலின் மூலகர்த்தாவான அல்கொய்தா தலைவர் பின்லேடனையே கொன்றுவிட்டோம்.
இதை எல்லாம் தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடித்த நமது ராணுவ வீரர்களை மறந்திடக் கூடாது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், மரியாதை செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் என்றார் ஒபாமா.

No comments:
Post a Comment