திடுக்கிடும் திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது நயன்தாரா, பிரபுதேவா திருமண விவகாரம். திருட்டுத்தனமாக முன்னாள் மனைவி, குழந்தைகளை பார்க்கப் போனார் பிரபுதேவா, இதையறிந்து கோபத்தில் கேட்டை பூட்டி தெருவில் காக்க வைத்தார் நயன்தாரா என்று தினம் ஒரு செய்தி. ஒவ்வொன்றும் பச்சை மிளகாய் கடித்த மாதிரி அப்படியொரு சுர்ர்ர்...
லேட்டஸ்ட், நயன்தாராவின் பிறந்தநாள் சேதி. நவம்பர் 18 ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு பரிசாக திருமண தேதியை பிரபுதேவா அறிவிப்பார் என்று இப்போதே ஜோசியம் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் அப்படியொரு ஐடியா இருக்கிறதா தெரியவில்லை. இல்லாவிட்டால் என்ன, நாம சொல்லி தெரிஞ்சுகிட்டா போச்சு என்ற ரீதியில் இந்தக் கல்லை விட்டெறிந்திருக்கிறார்கள்.

No comments:
Post a Comment