Sunday, November 20, 2011

மாவோயிஸ்ட் வீரர்களை ராணுவத்திலும் சமூகத்திலும் சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்.

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் வீரர்களை ராணுவத்திலும், சமூகத்திலும் சேர்க்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. நேபாளத்தில், மாவோயிஸ்ட்கள் புரட்சிக்குப் பின், ஜனநாயக பார்லிமென்ட் அரசியல் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மாவோயிஸ்ட்கள் மற்றும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை என்ன செய்வது என்பது பற்றி, பல ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வந்தது. நவம்பர் 1ம் திகதி, அந்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடி, இவ்விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்தனர்.
மொத்தமுள்ள 19 ஆயிரம் மாவோயிஸ்ட் வீரர்களில், 6,500 பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த முடிவில் குறிப்பிடப்பட்டன. இதற்கான பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவங்கின.

No comments:

Post a Comment

free counters