Thursday, November 24, 2011

கம்போடியா நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்த விசாரணை ஆரம்பம்.

கம்போடியா நாட்டை ஆட்சி செய்த கெமர்ரூச் ஆட்சியில் நடந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை நேற்று ஆரம்பமானது.
கம்போடியாவை ஆண்ட போல் பாட், கடந்த 1975ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை வியட்நாம் வம்சாவளி மக்கள் பலரை கொன்று குவித்தார்.
இவரது ஆட்சியில் 17 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.நா.வின் தலையீட்டின் பேரில் இந்த படுகொலை குறித்த விசாரணை நேற்று ஆரம்பமானது.

இந்த படுகொலையை நடத்திய போல் பாட் கடந்த 1998ல் காலமானார். இவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் நுவான்சியா, சமூக விவகாரத்துறை முன்னாள் அமைச்சர் லெங் திரித் உள்ளிட்ட மூன்று பேர் மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
இவர்கள் மூன்று பேரும் 80 வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

free counters