Monday, December 19, 2011
பெண்கள் மீதான தாக்குதல்-எகிப்திய இராணுவம்
எகிப்தில் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஆர்ப்பாட்டங்கள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அதில் ஆரப்பாட்டக்காரர்களை அடக்குவதற்காக தீடிரென நகரில் இராணுவத்தினரும் படையினரும் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களும் போலீசார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்த ஆத்திரமடைந்த போலீசார் கையில் சிக்கியவர்களை நையப்புடைத்தனர், ஆண்கள் அனைவரும் தப்பி ஓட மீதமிருந்த பெண்களிடம் தமது வீரத்தை வெளிப்படுத்திய அவர்களின் செயற்பாடுகள் பலராலும் பதிவுசெய்யப்பட்டன,
ஒரு பெண்ணை 3௦0 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தாக்குவதும், அவரின் மேலாடையை கழற்றி நெஞ்சுப்பகுதியில் கால்களால் தாக்குவதும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment