யாழ். குடாநாட்டில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு
பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று 5ம் திகதி திங்கட்கிழமை கைது
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த
இருவரையும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ். ஐந்து
சந்திப்பகுதியில் வைத்து இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸார்
தெரிவித்தனர்.

No comments:
Post a Comment