இளம் தாய் சிறுவனுடன் பாலியல் !
சிறுவனொருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த இளம் தாயொருவர் தொடர்பில் முறைப்பாடொன்று அம்பலந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்ணின் வயது 23 எனவும் குழந்தையொன்றின் தாயான அவர் 15 வயதான குறித்த சிறுவனுடன் கடந்த சில காலங்களாக தொடர்பொன்றைப் பேணி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டியே பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
பெண்ணின் கணவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும் அவர் இரவில் தொழில் நிமித்தம் வெளியே சென்றதும் அப்பெண் சிறுவனை பாலியல் தேவைகளுக்கு உபயோகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனின் பாலுறுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பெண் மருத்துவ பரிசோதனைகளுக்கென பொலிஸாரால் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment