Tuesday, September 3, 2013

இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தம் : புல­னாய்வு உஷார்!

சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாது­காப்புச் செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தார்.



இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள பாதுகாப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ

"இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பரப்ப முற்­படும் சக்­திகள் தொடர்பில் நாட்டின் புல­னாய்வு பிரி­வி­னரும் பொலிஸாரும் உஷார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். சில முஸ்லிம் தீவி­ர­வாத சக்­திகள் தீவி­ர­வாதத்தை பரப்புவதற்கான மையப் புள்­ளி­­யாக இலங்­கையை பய­ன்­ப­டுத்த எத்­த­னிக்­கின்­றன. 

அத்­துடன் இலங்­கை­க்குள் இந்த சக்திகள் தமது தீவி­ர­வாத கொள்­கை­களை முஸ்­லிம்கள் மத்­தியில் பரப்ப முயற்­சிக்­கின்ற­ன எனும் அச்சம் மேலோங்­கி­யுள்­ள­து. இலங்கை தற்போது கொண்டிருக்கும் சுதந்திரமான போக்கை தொடரவிடாது செய்வதற்காக அவர்கள் இலங்கையின் எதிர்காலத்தை தமது கையிலெடுக்கவிழையலாம்.

இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் பற்றி தவறான கருத்துக்கள் இருப்பதனால் தான் சீனாவுடனான இலங்கையின் நல்லுறவு சில நாடுகளுக்கு பிரச்சினையாக தெரிகின்றது.  இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார தொடர்பானவை மட்டுமே. சீனா பல காலமாக இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளியாக இருந்து வருகின்றது.

அது இலங்கையின் முக்கிய பொருளாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாகாது என்பதில் இலங்கை மிகத் தெளிவாக உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

free counters